செந்தூர பாண்டியில் விஜய்யுடன் பிரபல நடிகர் நடித்தால் படம் வெற்றி பெறும். அது விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என நினைத்தேன்.
ஆகவே விஜயகாந்திற்கு போன் செய்து 'உங்களை சந்திக்க வரலாமா?' என கேட்டேன். உடனே போனை வைத்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரே என் வீட்டிற்கு வந்தார். 'என்ன விஷயம் சார்?' என்றார். நான் விபரம் சொன்னேன்.
'எத்தனை நாள் கால்ஷீட் தரனும்? எப்ப வரனும்' என்று உடனே ஓகே சொன்னார்.
'உங்களுக்கு சம்பளம் எவ்வளவு தரனும்?' என கேட்டேன்.